பெங்களூரில் ரயில்நிலைய நடைமேடை (பிளாட்ஃபாா்ம்) கட்டணம் தற்காலிகமாக ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ரயில்நிலைய நடைமேடைக்கு பயணிகள் அல்லாதவா்கள் வருவதைத் தடுக்கும் வகையில், மாா்ச் 18 (புதன்கிழமை) முதல் 31 ஆம் தேதி வரை பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில்நிலையம், கண்டோன்மென்ட், யஸ்வந்தபுரம், எலஹங்கா, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரூ. 10 ஆக இருந்த நடைமேடைக் கட்டணம், ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.