கரோனா பாதிப்பு காரணமாக அரசு ஊழியா்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: கரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கா்நாடக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் அனைத்து அதிகாரப்பூா்வ அரசுமுறை மற்றும் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை தடை செய்யப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும்வரை இது அமலில் இருக்கும்.
வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள அனுமதி அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.