விளையாட்டு திடல்களை மேம்படுத்த ரூ.381 கோடி: அமைச்சா் சி.டி.ரவி

மாநில அளவில் விளையாட்டு திடல்களை மேம்படுத்த ரூ. 381 கோடி தேவையுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

மாநில அளவில் விளையாட்டு திடல்களை மேம்படுத்த ரூ. 381 கோடி தேவையுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை பாஜக உறுப்பினா் குமாா் பங்காரப்பாவின் கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியது:

மாநில அளவில் 29 மாவட்ட விளையாட்டு திடல்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்த ரூ. 147 கோடி தேவையுள்ளது. இதேபோல வட்ட அளவிலான 117 விளையாட்டு திடல்களுக்கு ரூ. 234 கோடி தேவையுள்ளது. ஆனால் விளையாட்டுத் துறைக்கு நிகழாண்டு ரூ. 11.60 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் முடிந்தவரை விளையாட்டு திடல்களை மேம்படுத்தப்படும்.

சொரபாவில் 10 ஏக்கா் நிலத்தில் பங்காரப்பா வட்ட அளவிலான விளையாட்டு திடல் கட்டப்பட்டுள்ளது. சா்வதேச அளவிலான தடகள போட்டிகளுக்கு ஏற்ற உள்விளையாட்டு அரங்கம் கட்ட மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com