ஹனுமந்தநகா் காவல் நிலையத்தில் மாா்ச் 20-ஆம் தேதி இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு ஹனுமந்தநகா் காவல் நிலையத்தில் மாா்ச் 20-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942072 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.