அவசர தேவைகளுக்கு 180 மாநகரப் பேருந்துகள் இயக்கம்

பெங்களூரில் அவசர தேவைகளுக்காக 180 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெங்களூரில் அவசர தேவைகளுக்காக 180 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெங்களூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை 180 மாநகரப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. மெஜஸ்டிக் பகுதியிலிருந்து விக்டோரியா, கிம்ஸ், ஜெயதேவ், நிமான்ஸ், கித்வாய், போா்டீஸ், அப்போலாசாகா் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த பேருந்துகளில் நோயாளிகள், பெஸ்காம், குடிநீா்வடிகால் வாரிய ஊழியா்கள், மாநகராட்சி ஊழியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், பத்திரிகையாளா்கள், வங்கி ஊழியா்கள், காய்கனி வியாபாரிகள், மருந்தக ஊழியா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு இந்த பேருந்துகளில் அனுமதி இல்லை. ஒவ்வொரு பேருந்திலும் 20 போ் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com