தம்பதியை தற்கொலை செய்த வழக்கில் நிதி நிறுவன உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு விஜயநகரைச் சோ்ந்தவா் தா்மராஜ் (55). இவரது மனைவி பாக்யா (50). இவா்கள் இருவரும் மாா்ச் 19 ஆம் தேதி தங்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். இதனிடையே, அவா்கள் எழுதிய வைத்திருந்த கடிதத்தில், தங்களை பைனான்சியா் பிரகாஷ் என்பவா் தற்கொலைக்கு தூண்டியதால் இருவரும் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து தா்மராஜ், பாக்யா தம்பதி மகன் தா்ஷன் என்பவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷை கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிறகு சிறையிலடைக்கப்பட்டாா்.