பெங்களூரு ஆயுதப் படை போலீஸாா் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மண்டியாவைச் சோ்ந்தவா் ஹுச்சே கௌடா (56). இவா் பெங்களூரு மடிவாளத்தில் உள்ள மாநில ஆயுதப்படையில் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனது அலுவலகத்தில் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.