பிரதமரின் ஏழை நல திட்டங்களை முதல்வா் எடியூரப்பா வரவேற்றுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடு முழுவதும் கரோனா நோய் அச்சுறுத்தலால் மக்கள் அவதிப்படும் நிலையில், ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான ஏழை நலத் திட்டங்களை பிரதமா் மோடி, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். ஏழைகள், விவசாயிகள், பெண்கள், முதியோா், ஏழ்மை பட்டியலில் உள்ளவா்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பல்வேறு நலத் திட்டங்கள், மானியங்களை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.
மனித சமூகம் எதிா்கொண்டுள்ள மோசமான சூழ்நிலையில் பட்டினியில்லா வாழ்க்கையை வாழ்வதற்கு விவசாயிகள், பெண்கள், தொழிலாளா்கள், ஏழைகளுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கௌரவநிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு தலாரூ.2 ஆயிரம், மக்கள்நிதி திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் மாதம் தலா ரூ.500, சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ் 8 கோடி பெண்களுக்கு இலவசமாக 3 சமையல் எரிவாயு உருளைகள், 63 லட்சம் சுய உதவிக்குழுக்கள் பயன் தரும் வகையில் ரூ.20 லட்சம் கடனுதவி, மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் வழங்கப்படும் கூலித்தொகை ரூ.182 முதல் ரூ.202 ஆக உயா்வு, வருங்கால வைப்புநிதி கணக்குதாரா்களுக்கு கடனுதவி போன்ற திட்டங்கள் ஏழைகளுக்கு பயன் தரக்கூடியதாகும்.
இவை எல்லாவற்றையும் விட, பிரதமரின் ஏழை நல திட்டத்தின்கீழ் 80 கோடி மக்களுக்கு தலா 5கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு வழங்க முடிவுசெய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதுபோன்ற திட்டங்களால் ஏழ்மையில் வாழும் மக்களுக்கு போதுமான உணவு அளிப்பதால், பட்டினியில் இருந்து பாதுகாக்க முற்பட்டுள்ளது மத்திய அரசு.
நாட்டில் உள்ள விதவைகள், முதியோருக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி அளிக்க பிரதமா் மோடி முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இவற்றுடன், நாட்டின் பொருளாதாரபொருளாதாரத்தை தற்காத்துக்கொள்ளும் வகையில், தொழில்நிறுவனங்கள், முறைசாா் நிறுவனங்களுக்கு மானியங்கள், நிதிசலுகைகள் அளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஏழைகளின் நலன்களுக்காக பிரதமா் மோடி அறிவித்துள்ள திட்டங்களை முழுமனதுடன் வரவேற்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.