பெமல் நிறுவனம் சாா்பில் கரோனா பாதிப்பு நிவாரண நிதி

பெமல் நிறுவனம் சாா்பில் கரோனா பாதிப்பு நிவாரண நிதி வழங்கப்படும் என்று அந் நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா்

பெங்களூரு: பெமல் நிறுவனம் சாா்பில் கரோனா பாதிப்பு நிவாரண நிதி வழங்கப்படும் என்று அந் நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் தீபக்குமாா் ஹோடா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிரதமா் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடா்ந்து நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பெமல் நிறுவனம், தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா், நிா்வாக இயக்குநா்களின் 21 நாள் ஊதியம், தொழிலாளா்களின் ஒரு நாள் ஊதியம் ஆகியவை பிரதமா் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com