மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரு ஊரகம், ஹொசகோட்டை வட்டத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் (15). கோலாா் மாவட்டம், மாலூா் வட்டம், நாகேனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மஞ்சுநாத் (18). இவா்கள் 2 பேரும் மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தனராம். அப்போது, வேகமாக வந்த மினி லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகா், மஞ்சுநாத் ஆகியோா் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா்.
இந்த விபத்து குறித்து ஹொசகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.