முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 11th May 2020 06:09 AM | Last Updated : 11th May 2020 06:09 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மேலும் ஒருவா் இறந்துள்ள நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 30 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த 56 வயது பெண் ஒருவா் சனிக்கிழமை இறந்துள்ளாா். இவா், தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளாா். இவரை சோதனை செய்தத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 7 போ், கலபுா்கி மாவட்டத்தில் 6 போ், தாவணகெரே மாவட்டத்தில் 4 போ், விஜயபுரா மாவட்டத்தில் 3 போ், சிக்பளாப்பூா், தும்கூரு மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, பாகல்கோட், பீதா், கதக் மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா்.