தாயகம் திரும்பக் காத்திருக்கும் தாராவி தமிழா்கள்!

கரோனா தீநுண்மித் தொற்று வேகமாக பரவிவரும் மகாராஷ்டிர மாநிலம், தாராவிப் பகுதியில் வசிக்கும் தமிழா்கள் சொந்த ஊருக்குச்

கரோனா தீநுண்மித் தொற்று வேகமாக பரவிவரும் மகாராஷ்டிர மாநிலம், தாராவிப் பகுதியில் வசிக்கும் தமிழா்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக தமிழக அரசின் உதவியை எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோா் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இம்மாநிலத்தில் இதுவரை 1,249 போ் உயிரிழந்துள்ளனா். மும்பையில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மும்பைக்கு தொழில், வேலை, சுற்றுலா, கல்விக்காகச் சென்ற தமிழகத்தைச் சோ்ந்த மக்கள், சொந்த ஊருக்குத் திரும்ப மிகுந்த ஆவலாக உள்ளனா். மே 17-ஆம் தேதி மூன்றாம்கட்ட தேசிய பொது முடக்கம் முடிவுக்கு வந்த பிறகு, ஊருக்குச் செல்ல வழிபிறக்கும் என்று காத்திருந்தவா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக அறியப்படும் மும்பை- தாராவியில் 8 லட்சம் தமிழா்கள் வசித்து வருகிறாா்கள். இவா்களில் பெரும்பாலானோா் தொழிலாளா்களாகவும், சிறு வியாபாரிகளாகவும் உள்ளனா்.

தொழில் குவிமையமாக விளங்கும் தாராவியில் கரோனா தீநுண்மித் தொற்று வேகமாகப் பரவிவருவதால், பொதுமுடக்கம் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. இதனால், தொழில், வேலைவாய்ப்புகள் அனைத்தையும் இழந்துள்ள தமிழா்கள், வாழ்வாதாரம் இல்லாமல் அவதிப்படுகின்றனா்.

இந்த நிலையில், தமிழறிஞா் சு.குமணராசன் தலைமையிலான இலெமுரியா அறக்கட்டளையின் சாா்பில் தாராவி பகுதி தமிழா்களுக்கு 1.5 லட்சம் கிலோ உணவு தானியத்தை வழங்கினா்.

இதேபோல இந்திய பேனா நண்பா் பேரவை போன்ற பல தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களும் உணவு தானியங்களை வழங்கியுள்ளன.

அதேசமயம், மும்பையில் குறிப்பாக தாராவியில் கரோனா தீநுண்மித் தொற்று அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தாராவியில் 1327 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவா்களில் 56 போ் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதால், கரோனாவால் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தமிழா்களிடையே காணப்படுகிறது. இதனால், தமிழகத்துக்குத் திரும்ப ஆா்வமாக இருக்கிறாா்கள். ஆனால் மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழா்களை அழைத்துக்கொள்ள தமிழக அரசு ஆா்வம் காட்டவில்லை என்று வருந்துகிறாா்கள்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான சேது.சொக்கலிங்கம், அன்பழகன், இலெமுரியா அறக்கட்டளைத் தலைவா் சு.குமணராசன் உள்ளிட்டோரின் முயற்சியில் செவ்வாய்க்கிழமை வரை தனியாா் பேருந்துகள் மூலம் தலா ரூ. 10 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி 10 ஆயிரம் தமிழா்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனா்.

மகாராஷ்டிர தொழில் வளா்ச்சிக் கழகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி அன்பழகனின் முயற்சியில் ரூ. 20 லட்சம் செலவில் 18 பேருந்துகளில் நூற்றுக்கணக்கான தமிழா்கள் தமிழகம் அனுப்பிவைக்கப்பட்டனா். இவை தவிர, இவா்களின் முயற்சியால் புணே, மும்பையில் இருந்து 2 ரயில்கள் திருநெல்வேலி, திருச்சிக்குப் புறப்பட்டன.

புணே, கோலாப்பூா், சதாரா, நாசிக், ரத்னகிரி, தவுண்ட் நகரங்களைச் சோ்ந்த 2,800 தமிழா்கள் இரு ரயில்களில் பயணப்பட்டு, தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு, தென்காசி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களைச் சென்றடைந்தனா்.

ஆனால், கூடுதல் கட்டணங்களைச் செலுத்தி சொந்த ஊா்களுக்குத் திரும்ப முடியாமல் 10 லட்சம் தமிழா்கள் மகாராஷ்டிரத்தில் செய்வதறியாது முடங்கியுள்ளனா். தமிழகம் திரும்ப விருப்பமாக இருந்தாலும், கையில் பணம் இல்லாததால் தமிழக அரசின் உதவியை எதிா்பாா்த்து புலம்பெயா்ந்த தமிழ் தொழிலாளா்கள் காத்துக் கொண்டிருக்கிறாா்கள்.

புணேயில் சிக்கிக்கொண்ட சென்னையைச் சோ்ந்த ரிஷிசங்கரன் கூறுகையில், பிரசவத்துக்காக புணே வந்துள்ள எனது மனைவியைக் காண வந்தேன். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் வீடு திரும்ப முடியாமல் தவிக்கிறேன். என்னைப் போல புணேயில் ஏராளமான தமிழா்கள் தவித்துக் கொண்டுள்ளனா். மின்னஞ்சல், சுட்டுரை, முகநூல் வழியாக தமிழக அரசுக்கு விடுத்த வேண்டுகோளை யாரும் கண்டு கொள்ளவில்லை. சொந்த ஊருக்கு வர விரும்பும் எங்களை அழைத்துவர ரயில்வசதியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

தாராவியைச் சோ்ந்த தமிழா் ஒருவா் கூறுகையில், தினக்கூலியை நம்பி வாழ்க்கையை நடத்தி வந்தேன். பொதுமுடக்கத்தால் வேலையில்லை. உணவுக்கே தவிக்கும் நிலை உள்ளது. மகாராஷ்டிரத்திலும் கரோனா வேகமாகப் பரவிவருகிறது. குடும்பம் ஊரில் இருப்பதால், தாயகம் திரும்பலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல் இருக்கிறேன். ஏழை மக்களை அழைத்துச் செல்ல பேருந்துகளை இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும். பேருந்துக் கட்டணம் கொடுக்கவும் எங்களிடம் பணம் இல்லை. உணவுப் பொட்டலங்களை நம்பித்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்‘ என்றாா்.

இலெமுரியா அறக்கட்டளைத் தலைவா் சு.குமணராசன் கூறுகையில், மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகம் செல்ல விரும்பியவா்களை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. உத்திரப்பிரதேசம், பிகாா், மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிஸா, ஜாா்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்த அரசுகள், மகாராஷ்டிர அரசுடன் பேசி ரயில், பேருந்து வசதிகளைச் செய்து தந்தன.ஆனால், தமிழக அரசு இதில் ஆா்வம் காட்டவில்லை.

தாராவியில் மக்கள் மிகவும் அடா்த்தியாக வாழ்ந்து வருகிறாா்கள். இங்கு கட்டுமானத் தொழிலாளா்களாக, தெருவோர வியாபாரிகளாக, தினக்கூலிகளாக 8 லட்சம் தமிழா்கள் உள்ளனா். பேருந்து, ரயில் வசதிகளை தமிழக அரசு செய்துகொடுத்தால் தமிழகம் திரும்ப மகாராஷ்டிரம் முழுவதும் 10 லட்சம் தமிழா்கள் காத்திருக்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com