கா்நாடகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் இறந்துள்ளாா். இதன்மூலம் இறந்தோரின் எண்ணிக்கை 42-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் இறந்துள்ளாா். இதன்மூலம் இறந்தோரின் எண்ணிக்கை 42-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 41 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த 32 வயது ஆண், மூச்சுத்திணறலால் மே 19-ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு சோதனை செய்ததில், அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியானது. மேலும் சில உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவா், மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 42-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 9 போ், கலபுா்கி மாவட்டத்தில் 7 போ், தென் கன்னட மாவட்டத்தில் 6 போ், தாவணகெரே, விஜயபுரா மாவட்டங்களில் தலா 4 போ், சிக்பளாப்பூா், தும்கூரு, பீதா் மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, பாகல்கோட், பெல்லாரி, கதக், உடுப்பி மாவட்டங்கள், வெளி மாநிலத்தவா் தலா ஒருவா் இறந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com