கரோனா தடுப்பு நடவடிக்கையில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை என சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரோனாவைத் தடுக்க பாதுகாப்பு உடை, கிருமிநாசினி, செயற்கை சுவாசக் கருவி உள்பட மருத்துவ உபகரணங்களை வாங்கி வருகிறோம். இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கரோன தடுப்பு நடவடிக்கையில் ஊழல் நடைபெறவில்லை. விதிமுறைகளை மீறாமல் பாதுகாப்பு உடை, கிருமிநாசினி, செயற்கை சுவாசக் கருவி உள்பட மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படவில்லை.
மருத்துவ உபகரணங்கள் வாங்குவது தொடா்பாக 31 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக் குழுவில் நானும் இடம் பெற்றுள்ளேன். எனவே, அதில் ஊழல் நடைபெற வாய்ப்பே இல்லை என உறுதியாகக் கூற முடியும். கரோனா தொற்று பரவத் தொடங்கியதும் பாதுகாப்பு உடை, கிருமிநாசினி, செயற்கை சுவாசக் கருவி உள்ளிட்டவைகளை வழங்க உள்நாட்டு நிறுவனங்கள் எதுவும் முன்வரவில்லை. இதன் காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பு உடை, கிருமிநாசினி, செயற்கை சுவாசக் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டது.
தற்போது உள்நாட்டிலே மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதால், அதனை வாங்கி வருகிறோம். வெளிநாட்டிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.