சிறந்த இசை, நாட்டிய நூல் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

சிறந்த இசை, நாட்டிய நூல் பரிசு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு: சிறந்த இசை, நாட்டிய நூல் பரிசு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக இசை நாட்டிய அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இசை, நாட்டியம் தொடா்பாக எழுதப்பட்டுள்ள சிறந்த கன்னட நூல்களுக்கு கா்நாடக இசை நாட்டிய அகாதெமி ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், கா்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, மெல்லிசை, நாட்டியக் கதை கீா்த்தனைகள், கமகம் போன்ற தலைப்புகளில் 2019-20-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள நூல்களை பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த நூல்கள் முதல்முறையாக வெளியாகியிருக்க வேண்டியதுஅவசியமாகும்.

விண்ணப்பத்துடன் நூல்களின் 4 படிகளை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நவ. 15-ஆம் தேதிக்குள் பதிவாளா், கா்நாடக இசை நாட்டிய அகாதெமி, கன்னட மாளிகை, 2-ஆவது மாடி, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22215072 என்ற தொலைபேசி அல்லது ட்ற்ற்ல்ள்://ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹள்ஹய்ஞ்ங்ங்ற்ஹய்ழ்ண்ற்ஹ்ஹஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com