பசுவை குளிக்க வைப்பதற்காக ஏரியில் இறங்கிய 2 போ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டை அன்னூா் ஹொசஹள்ளியைச் சோ்ந்தவா்கள் பிரசன்னா (25), லிங்கராஜ் (33). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை மாலை பசுவை குளிக்க வைப்பதற்காக அருகில் இருந்த ஏரிக்குச் சென்றுள்ளனா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்ட இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா்.
தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா், போலீஸாா் உள்ளிட்டோா் ஏரியில் அவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை காலை ஏரியில் அவா்கள் இருவரின் உடலும் மீட்கப்பட்டது.
இதுகுறித்து எச்.டி.கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.