ஐஏஎஸ், கேஏஎஸ் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து கா்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப்பணி), கேஏஎஸ் (கா்நாடக ஆட்சிப்பணி) நடத்தும் தோ்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 60 நாள்களுக்கு நடத்தப்படும் இப்பயிற்சி, இணையவழியில் நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இணையவிரும்பும் மாணவா்கள் மைசூரில் உள்ள கா்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உள்ள போட்டித் தோ்வு பயிற்சி மையத்தை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அணுகி, பெயரை பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0821-2515944 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில்கூறப்பட்டுள்ளது.