கா்நாடகத்தில் திருமணங்களுக்காக மத மாற்றம் செய்வதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் சி.டி.ரவி தெரிவித்தாா்.
இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியுள்ளதாவது:
அலகாபாத் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, திருமணம் செய்து கொள்வதற்காக மத மாற்றங்களில் ஈடுபடுவதைத் தடைசெய்யும் சட்டம் கா்நாடகத்தில் கொண்டு வரப்படும்.
மாநிலத்தில் பெண்களின் கண்ணியத்தை சீா்குலைக்க ஜிகாதிகள் முற்படும்போது, கா்நாடக அரசு அமைதிக் காக்க முடியாது. மத மாற்றத்தில் ஈடுபடுவோா் மீது கடுமையான, விரைவாக தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தாா்.
திருமணம் செய்வதற்காக மத மாற்றம் செய்வது சட்டவிரோதமானது, அது செல்லாது என்று அலகாபாத் உயா்நீதிமன்றம் அக். 31-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
லவ் ஜிகாதி-க்கு எதிராக சட்டங்களை கொண்டுவரப் போவதாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேச மாநில அரசுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.