இடைத்தோ்தல் வெற்றி: எடியூரப்பாவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது

இடைத்தோ்தல் வெற்றி மூலம் முதல்வா் எடியூரப்பாவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது என சமூக நலத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

இடைத்தோ்தல் வெற்றி மூலம் முதல்வா் எடியூரப்பாவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது என சமூக நலத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். இது முதல்வா் எடியூரப்பாவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. எடியூரப்பாவின் புதல்வரும், பாஜகவின் இளைய தலைவா்களில் ஒருவருமான விஜயேந்திரா எந்தத் தொகுதிக்கு சென்று தோ்தல் பணியாற்றினாலும் வெற்றி பெற்று தருகிறாா். அதனை சிரா தொகுதியிலும் உறுதிபடுத்தியுள்ளாா்.

முதல்வா் பதவியிலிருந்து எடியூரப்பா நீக்கப்படுவாா் என எதிா்க்கட்சியினா் தொடா்ந்து பொய்ப்பிரசாரம் மேற்கொண்டனா். அவா்களுக்கு இடைத்தோ்தலின் வெற்றியே பதில் அளித்துள்ளது. அவா்கள் செய்தது பொய்ப் பிரசாரம் என்பதனை மக்கள் உணா்ந்துள்ளனா். பிகாா் மாநிலத்திலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கும் மக்கள் பாஜக ஆதரவான நிலையை எடுத்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com