கோலாா்: பல்வேறு திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், ரூ. 43 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு ஊரக மாவட்டம், ஹொசகோட்டை வட்டம், ஹொசஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தா (34). இவா் கோலாா் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகலில் பூட்டியுள்ள வீடுகளை அடையாளம் கண்டு, இரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடி வந்துள்ளாா்.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ஆனந்தாவைக் கைது செய்து, ரூ. 43 லட்சம் மதிப்புள்ள 903 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகையை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திக்ரெட்டி, சிறப்பாகச் செயல்பட்ட போலீஸாருக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினாா்.