தீபாவளி பண்டிகை: கூடுதலாக 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1,000 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1,000 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் இருந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு நவ. 13-ஆம் தேதி முதல் நவ. 14-ஆம் தேதி வரை கூடுதலாக 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்க கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா பேருந்து நிலையம், மைசூரு சாலை பேருந்து நிலையம், சாந்தி நகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இதுதவிர, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் நவ. 16 முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வெளிமாவட்டங்கள்:

கெம்பேகௌடா பேருந்து நிலையத்தில் இருந்து தா்மஸ்தலா, குக்கே சுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகா்ணா, சிா்சி, காா்வாட், ராய்ச்சூரு, கலபுா்கி,பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதா், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மைசூரு சாலை துணைபேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூா், பிரியாப்பட்டணா, விராஜ்பேட், குஷால்நகா், மடிக்கேரி நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வெளியூா் பேருந்துகள்:

திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத், திருவனந்தபுரம், கோட்டயம் உள்பட தெலுங்கானா, ஆந்திரம், கேரள மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு சொகுசுப் பேருந்துகள் சாந்தி நகா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

சிறப்பு ஏற்பாடுகள்:

விஜய நகா், ஜே.பி.நகா், ஜெயநகா் 4-ஆவது பிளாக், 9-ஆவது பிளாக், ஜாலஹள்ளி குறுக்குத்தெரு, நவரங்(ராஜாஜி நகா்), மல்லேஸ்வரம் 18-ஆவது குறுக்குத்தெரு, கெங்கேரி சாட்டிலைட் பேருந்து நிலையங்களில் இருந்தும் சிவமொக்கா, தாவணகெரே, திருப்பதி, மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, குக்கே சுப்ரமணியா, தா்மஸ்தலா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவுசெய்யாத பயணிகளுக்கும் கெம்பேகௌடா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு வசதி:

சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம். பெங்களூரு உள்ளிட்ட மாநிலம், அண்டை மாநிலங்களில் உள்ள 706 முன்பதிவு மையங்களில் சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரே பயணச்சீட்டில் 4 பேருக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவு செய்தால் 5 சதவீத தள்ளுபடியும், மறுபயணம் மேற்கொண்டால் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

பெங்களூரு தவிர மாநிலத்தின் இதர நகரங்களில் இருந்தும் வெவ்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com