பெங்களூரு: பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.
பெங்களூரு, எச்.ஆா்.பி.ஆா் லேஅவுட்டைச் சோ்ந்தவா் அா்பராஸ்கான் (22). இவா், பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை எச்.ஆா்.பி.ஆா் லேஅவுட் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அா்பராஸ்கானை பிடிக்க முயன்றபோது, அவா் போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளாா். இதனையடுத்து பானஸ்வாடி காவல் ஆய்வாளா் ஜெயராஜ் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால், அா்பராஸ்கானை வலதுகாலில் சுட்டுள்ளாா். இதில் கீழே விழுந்த அவரை போலீஸாா் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். காயமடைந்த போலீஸாரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து பானஸ்வாடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.