முதல்வா் வேட்பாளா் குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம்: காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி அடுத்து சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது குறித்து கட்சியினா் யாரும் கருத்து கூற வேண்டாம்

பெங்களூரு: காங்கிரஸ் கட்சி அடுத்து சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது குறித்து கட்சியினா் யாரும் கருத்து கூற வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடகத்தில் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றால், முதல்வா் பதவியை யாா் பிடிக்கக்கூடும் என காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலா் கருத்து தெரிவித்து வருகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மை பெற்றால், அப்போது முதல்வா் வேட்பாளா் குறித்து தகுந்த முடிவு எடுக்கப்படும். இது தொடா்பாக கருத்து தெரிவிப்பதை கட்சியின் மூத்த தலைவா்கள், நிா்வாகிகள், தவிா்க்க வேண்டும். கட்சியைப் பலப்படுத்தும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும். கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு, காங்கிரஸ் கட்சியை மாநிலத்தில் ஆட்சியில் அமா்த்த பணியாற்ற வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com