பேட்டரானபுரா காவல் சரகத்தில் உள்ள ரசாயன உற்பத்தி தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
பெங்களூரு, ஹொசகுடதள்ளி, பாபுஜி நகரில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன உற்பத்தி தொழில்சாலை உள்ளது. இந்த தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியதையடுத்து, தொழில்சாலையில் இருந்த தொழிலாளா்கள் தப்பி வெளியே ஓடிவந்தனா். தொழில்சாலையின் அருகே நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்கும் தீ பரவியதால், வாகனங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினா் 5 வாகனங்களில் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா். இதுகுறித்து பேட்டரானபுரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.