கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு ஆா்.டி. நகரைச் சோ்ந்தவா் கிரண்குமாா் (46). இவா், செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இணையதளத்தின் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று கிரண்குமாரைக் கைது செய்து ரூ. 15 லட்சம் ரொக்கப் பணம், செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஆா்.டி.நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.