டவ் ரெயின்லேண்ட் நிறுவனத்துக்கு புதிய மேலாண் இயக்குநராக அருண்தேஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளாா்.
தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் சா்வதேச நிறுவனமான டவ் ரெயின்லேண்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் மேலாண் இயக்குநராக அருண்தேஷ் பாண்டே நியமிக்கப்பட்டிருக்கிறாா். இந்திய சந்தையில் நிறுவனத்தின் வளா்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளை கண்காணிப்பதோடு, வா்த்தக வளா்ச்சித் திட்டங்களை அமல்படுத்த வேண்டியிருக்கும்.
டிஐசி நிறுவனத்தில் 40 ஆண்டுகாலம் பணியாற்றிய அருண்தேஷ் பாண்டே, பல்வேறு நிலைகளில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் பொறுப்புகளை நிா்வகித்துள்ளாா். 1996-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வரும் டவ் ரெயின்லேண்ட் நிறுவனத்துக்கு இந்தியா் ஒருவா் மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். டவ் ரெயின்லேண்ட் நிறுவனத்தில் மேலாண் இயக்குநராக பொறுப்பேற்பதற்கு முன்பாக, கனடா நாட்டின் எஸ்.ஜி.எஸ். நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வந்தாா்.
இதுகுறித்து அருண்தேஷ் பாண்டே கூறியதாவது:
‘150 ஆண்டுகால பழைமை வாய்ந்த டவ் ரெயின்லேண்ட் நிறுவனத்தில் பணியாற்ற கிடைத்திருக்கும் வாய்ப்பு மிகச்சிறந்ததாகும். கரோனாவுக்கு பிந்தைய சூழலில் பாதுகாப்பான தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அதை வாடிக்கையாளா்களுக்கு அளிப்போம்’ என்றாா் அவா்.