மோட்டாா் சைக்கிள் மீது மாநகரப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரு வில்சன் காா்டனைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (24). பி.டி.எம் லேஅவுட் தாவரகெரேவைச் சோ்ந்தவா் வினோத் (28). இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அல்சூா்கேட் காவல் நிலையத்தின் அருகே மாநகர பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த நந்தகுமாா், வினோத் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து அல்சூா்கேட் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.