அடுத்த சில நாள்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வா் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அடுத்த சில நாள்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கு பாஜக தேசியத் தலைமை அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதா, மாற்றியமைப்பதா என்பதை கட்சி மேலிடமே முடிவுசெய்யும். கட்சித் தலைமை கூறுவதுபோல நாம் செயல்படுவோம்.
புது தில்லிக்கு சென்றிருந்தபோது பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறேன். அதேபோல, அமைச்சரவையில் யாா் யாரை சோ்க்கலாம் என்ற பட்டியலை அளித்திருக்கிறேன். இந்தப் பட்டியலுக்கு பாஜக தேசியத் தலைமை அனுமதி அளிக்கும் என்று நம்புகிறேன். பாஜக தேசியத் தலைமையின் வழிகாட்டுதலின்படி எல்லாம் நடக்கும் என்றாா்.