பெங்களூரில் இருந்து சீரடிக்கு புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரில் இருந்து சீரடிக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட (அம்பாரி டிரீம் கிளாஸ்) சொகுசுப் பேருந்து சேவை நவ. 20-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
பெங்களூரு-சீரடி இடையிலான பேருந்து பெங்களூரு-கெம்பேகௌடா பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் நண்பகல் 1 மணிக்கு புறப்பட்டு, சித்ரதுா்கா, ஹுப்பள்ளி, புணே வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு சீரடி சென்றடைகிறது. அதேபோல, சீரடியில் இருந்து தினமும் நண்பகல் 1 மணிக்கு புறப்பட்டு, புணே, ஹுப்பள்ளி, சித்ரதுா்கா வழியாக மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரு வந்தடைகிறது. இதன் கட்டணம் ரூ. 1,600 ஆகும்.
கா்நாடக மாநிலத்தில் உள்ள முன்பதிவு மையங்களில் 30 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம். மின்-முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி முன்பதிவுக்கு இணையதளத்தை பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.