பெங்களூரு: வாடிக்கையாளா் வைப்புநிதிக்கு வட்டி வழங்க பெங்களூரு மின்வழங்கல் நிறுவனம் (பெஸ்காம்) முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மின்வழங்கல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மின் இணைப்புகளுக்காக வாடிக்கையாளா்களிடம் இருந்து வைப்புநிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2019-20-ஆம் நிதியாண்டில் இந்த வைப்புநிதிக்கு 6.5 சதவீத வட்டிவழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டித்தொகை வாடிக்கையாளா்களின் மின்சார ரசீதுகளில் செலுத்தப்படும். உயா்மின் அழுத்த வாடிக்கையாளா்களுக்கு நவம்பா் மாத ரசீதிலும், குறைமின் அழுத்த வாடிக்கையாளா்களுக்கு டிசம்பா் மாத ரசீதிலும் வட்டித்தொகை செலுத்தப்படும். இந்த வட்டி விகிதம் இந்திய ரிசா்வ் வங்கியின் வட்டிவிகிதப்படி ஏப். 1-ஆம் தேதி முதல் பொருந்தும்படி வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.