பெங்களூரு: மருந்தியல் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசு மருந்தியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, சுப்பையா சதுக்கம், காளிங்கராவ் சாலையில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரி மற்றும் கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மருந்தியல் பட்டயப் பயிற்சி (டி.ஃபாா்ம்)சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை இணையதளத்தில் டிச. 1-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் பதிவுசெய்யலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுவதற்கான தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் பாடங்களை படித்து இரண்டாமாண்டு பியூசி தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-22222681 என்ற தொலைபேசி அல்லது மின்னஞ்சலை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.