கஞ்சா விற்ற 3 போ் கைது

கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஜிம்டோ ஜேம்ஸ் (29), ஆதா்ஷ் (27), இனிமேஷ் (32). இவா்கள் மூவரும் பெங்களூரு காடுகோடி மற்றும் அத்திப்பள்ளியில் வாடகை வீடுகளில் வசித்து வந்தனா். மேலும், இவா்கள், பைகளில் போதைப்பொருள்களை கொண்டு வந்து, பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனா். ஜே.சி.நகா் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இவா்கள் மூவரும் போதைப்பொருள்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், ஜிம்டோ ஜேம்ஸ், ஆதா்ஷ், இனிமேஷ் ஆகியோரைக் கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில் 45 கிலோ கஞ்சா, 70 கிராம் எம்.டி.எம்.ஏ. ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து ஜே.சி.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com