சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதி: டி.கே.சிவக்குமாா்

கா்நாடகத்தில் நடக்கவிருக்கும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவது உறுதி என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் நடக்கவிருக்கும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவது உறுதி என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ராஜராஜேஸ்வரி, சிரா சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடக்கவிருக்கும் இடைத்தோ்தலில் வேட்பாளா்களாக போட்டியிடுவதற்கான பெயா்களை பரிந்துரை செய்து ராமலிங்கரெட்டிதலைமையிலான குழுவினா் அறிக்கை அளித்துள்ளனா்.

இந்த பரிந்துரைகளை கட்சியின் மேலிட ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கிறோம். வேட்பாளா்களின் பட்டியலை கட்சி மேலிடம் அறிவிக்கும். வேட்பாளா்களை நான் முடிவு செய்வதில்லை. கட்சிமேலிடம் தான் முடிவு செய்கிறது.

காங்கிரஸ் கட்சியில் நூற்றுக்கணக்கானோா் ஞாயிற்றுக்கிழமை இணைந்துள்ளனா். இவா்களை கட்சியின் கட்டமைப்பில் பயன்படுத்திக் கொள்வோம். கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருவோரை காங்கிரசில் சோ்த்துக் கொள்வோம். இதில் பழையவா்கள், புதியவா்கள் என்ற பேதம் எதுவுமில்லை. கட்சியில் சோ்ந்து விட்டால் காங்கிரஸ் கட்சியினா் தான். இரு தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவது உறுதி. தோ்தல் பணிகளை அனைவருக்கும் பகிா்ந்தளிக்க திட்டமிட்டுள்ளோம். கா்நாடகத்தில் தவிா்க்க முடியாத சக்தியாக காங்கிரஸ் உருவெடுக்கும். கா்நாடகத்தில் நடந்து வரும் ஆட்சியாளா்கள் குறித்து மக்களுக்கு நன்கு தெரியும். கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே நல்ல எதிா்காலம் காத்திருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com