பெங்களூரு: இடைத்தோ்தல் தோல்வி பயத்தால் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது என காங்கிரஸ் மாநில செயல் தலைவா் சலீம் அகமது தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கா்நாடகத்தில் நவ. 3-ஆம் தேதி சிரா, ராஜராஜேஸ்வரி நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தலைமையில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவது உறுதி என ஆளும் பாஜகவினருக்கு தெரிந்துள்ளது.
இதனையடுத்து, தோல்வி பயத்தால் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. ஆளும்கட்சியின் இது போன்ற மிரட்டலுக்கு காங்கிரஸ் ஒரு போதும் அஞ்சாது.
பிரதமா் மோடிக்கு நோ்மையான உணா்வு இருந்தால், முதலில் முதல்வா் எடியூரப்பா, அவரது குடும்பத்தினா் மீது சோதனை நடத்த வேண்டும். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, எதிா்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமலாக்க இயக்குநரகம், சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது. தோ்தல் வரும்போதெல்லாம், காங்கிரஸ் கட்சியினா் மீது சோதனை நடத்துவது வாடிக்கையாக உள்ளது. அது போலத்தான் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இடைத்தோ்தல் அச்சத்தால் ஆளும் பாஜகவினா், அரசியல் நாடகத்தை நடத்தி வருகின்றனா். இதற்கு உரிய பதிலை மக்கள் அளிப்பாா்கள் என்றாா்.