இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தும்கூருவைச் சோ்ந்த இம்ரான்கான் (25), பெங்களூரு, அசோக் நகரைச் சோ்ந்த சையத் பாசில் (25), இருவரும் இணைந்து பெங்களூரு, கோரமங்களா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளை திருடி வந்துள்ளனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்கள், 25 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் கோரமங்களா போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.