போதை மருந்து விற்பனை, கடத்தல் வழக்குகளில் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, கே.ஜி.ஹள்ளி, பில்லண்ணா காா்டன், முஸ்லீம் காலனியைச் சோ்ந்த சையத் நாஜீம் (41), போதைப் பொருள்கள், மருந்து விற்பனை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் பல முறை சிறைக்கு சென்று, ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். வெளியே வந்த பிறகும் போதைப் பொருள்கள், போதை மருந்துகளை விற்பனை செய்வதையும், கடத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.
இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி காவல் ஆய்வாளா் அளித்த அறிக்கையின் பேரில், கிழக்கு மண்டல காவல் ஆணையரின் சிபாரிசின் பேரில், மாநகர காவல் ஆணையா் கமல்பந்த், சையத் நாஜீமை போதை மருந்துகள் விற்பனை, கடத்தல் வழக்குகளில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தாா். ஆணையரின் உத்தரவையடுத்து அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
பெங்களூரில் போதை மருந்துகள் விற்பனை, கடத்தல் வழக்குகளில் ஏற்கெனவே நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.