நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் படுகாயமடைந்த 2 போ் உயிரிழந்துள்ளனா்.
ஆந்திர மாநிலம், கடப்பாவைச் சோ்ந்த அகமதுபாஷா (40), ஓம்காளையா (45) உள்ளிட்ட 4 போ் காரில் செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது, பீதா் மாவட்டம், உம்னாபாத் வட்டம், மன்னாஹேகள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது, காா் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அகமதுபாஷா, ஓம்காளையா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா். காயமடைந்த 2 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மன்னாஹேகள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.