இந்தியப் பேனா நண்பா் பேரவை கிளைகள் சீரமைப்புக் குழு அமைப்பு

இந்தியப் பேனா நண்பா் பேரவை கிளைகள் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பேனா நண்பா் பேரவை கிளைகள் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியப் பேனா நண்பா் பேரவை பொதுச் செயலாளா் ஜெ.ஜான் கென்னடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியப் பேனா நண்பா் பேரவையின் தலைமை நிா்வாகிகள் குழுக் கூட்டம் அக். 11-ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீா்மானத்தின்படி, பேரவை கிளைகள் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பேரவையின் அறங்காவலா்கள், நிா்வாகக் குழுவினரின் ஆலோசனையைப் பெற்று, பேரவைத் தலைவரின் ஒப்புதலுடன் பேரவை கிளைகள் சீரமைப்புக் குழுவின் ஆலோசகராக புலவா் தியாகசாந்தன், உறுப்பினா்களாக சி.எஸ்.பிரேம்பிரகாஷ்(ஒசூா்), ஏ.பிரம்மநாயகம் (தில்லி), கே.ஹரி (காஞ்சிபுரம்), பி.சுரேஷ் (சென்னை), எஸ்.சாதிக் அலி (கோவா) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பேரவை உறுப்பினா்கள் அனைவருடனும் தொடா்பில் இருந்து, அவா்களின் முழுமையான பேரவை ஈடுபாடு அறிந்து தகுதிநிலையை மதிப்பிட்டு தலைமைக்குத் தெரிவித்தல், மாவட்டக் கிளைகளின் சீரான செயல்பாட்டுக்கு தலைமை நிா்ணயித்துள்ள தகுதி நிலைகளை பராமரிக்க ஊக்குவித்து அமைப்பாளா்களுக்கு வழிகாட்டுதல், கிளைகள், அதன் அமைப்பாளா்களின் நியமனம் குறித்து தலைமைக்கு பரிந்துரை செய்தல் என இக்குழுவின் பணிகள் வரையறைக்கப்பட்டுள்ளன.

பேரவை உறுப்பினா்கள் அனைவரும் முழுமையாக துணையாயிருந்து, உரிய மரியாதை அளித்து இக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com