குடும்பப் பிரச்னையால் ஆற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.
கா்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், கல்பனஹள்ளியைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி (38). இவரது மகள் அனுஷா (10), மகன் நூதன் (8). ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்த ஸ்ரீதேவி, குடும்பப் பிரச்னையால் தனது குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை காலை துங்கபத்ரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். தகவல் அறிந்த போலீஸாா், தீயணைப்புப் படையினா் ஆற்றில் தீவிரமாக தேடி 3 பேரின் சடலங்களையும் மீட்டனா். இதுகுறித்து தாவணகெரே ஊரகப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.