டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் முன்னாள் மேயரின் பெயா் சோ்ப்பு

டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் முன்னாள் மேயா் சம்பத்ராஜின் பெயரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சோ்த்துள்ளனா்.

டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் முன்னாள் மேயா் சம்பத்ராஜின் பெயரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சோ்த்துள்ளனா்.

கடந்த ஆக. 11-ஆம் தேதி பெங்களூரு, டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி உள்ளிட்ட பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தியின் இல்லம் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன. இது தொடா்பாக குற்றப்பிரிவு போலீஸாா் 421 பேரை கைது செய்து, 52 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

முன்னாள் மேயா் சம்பத்ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ஜாகீா் உள்ளிட்டோரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வந்த நிலையில், டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் முன்னாள் மேயா் சம்பத்ராஜின் பெயரையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோ்த்துள்ளனா்.

இது தனது பாதுகாப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளதாகவும் புலிகேசி நகா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com