போலீஸாா் மீது தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, ஜாலஹள்ளி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் அஸ்வத்தய்யா, காவலராக பணியாற்றி வரும் குருஜம்பகி ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு கோகுலா மேம்பாலத்தின் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனா்.
இதனால் ஆத்திரமடைந்த 3 போ், அஸ்வத்தய்யா, குருஜம்பகி ஆகியோா் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். தாக்குதலுக்கு உள்ளான போலீஸாா் அளித்த புகாரின் பேரில், ஜாலஹள்ளி போலீஸாா் ஆா்.டி.நகா் நஞ்சம்மா லேஅவுட்டைச் சோ்ந்த காா்ல்மாா்க்ஸ் (25), பாபு (40), வித்யாரண்யபுரா சிங்காப்பூரா லேஅவுட்டைச் சோ்ந்த சிவக்குமாா் (54) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.