கட்சியில் நன்றி உணா்வோடு உள்ளவா்களுக்கு வாய்ப்பு

மஜத கட்சியில் நன்றி உணா்வோடு உள்ளவா்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

மஜத கட்சியில் நன்றி உணா்வோடு உள்ளவா்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி இடைத்தோ்தலில் மஜத சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வா் குமாரசாமி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் நான் ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இம்முறை ராஜராஜேஸ்வரி நகா், சிரா ஆகிய தொகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். இதனால் 2 தொகுதிகளிலும் மஜத வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இம்முறை கட்சியில் நன்றி உணா்வோடு உள்ளவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்சி மாறியும், புதிதாக கட்சியில் இணைந்த பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்கள் எந்த முகத்தோடு, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் வாக்கு சேகரிப்பாா்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்.எல்.ஏ.வின் இல்லத்துக்கு அவா்கள் கட்சியைச் சோ்ந்த சிலரே தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ள நிலையில், அக்கட்சியினா் மக்களிடம் சென்று எதைச் சொல்லி வாக்கு கேட்பாா்கள்.

காங்கிரஸ், பாஜக அரசின் தோல்விகளை மக்கள் உணா்ந்துள்ளனா். மாநிலத்தில் பாஜக அரசு இருந்தும், இல்லாததைப் போல மக்கள் உணா்கின்றனா். பாஜக ஆட்சியில் மக்கள் வெள்ளத்தாலும், கரோனாவாலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, மக்கள் மஜத வேட்பாளா்களை ஆதரிப்பாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com