கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, வா்த்தூா், ராமகிருஷ்ணா சாலையைச் சோ்ந்தவா் ஜமீா் அகமது (39). இவா் செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்ற சன் ரைஸா்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, பெங்களூரு, வா்த்தூா், பலகெரே சாலையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், ஜமீா் அகமதுவைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 4 லட்சம் ரொக்கம், 1 செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வா்த்தூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.