மைசூரு தசரா விழாவில் மல்யுத்தப் போட்டிக்கு தடை

கரோனா தொற்று பரவலையடுத்து, மைசூரு தசரா விழாவில் மல்யுத்தப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலையடுத்து, மைசூரு தசரா விழாவில் மல்யுத்தப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் மைசூரு தசரா விழாவில் மல்யுத்தப் போட்டிகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா தொற்று உலக அளவில் பரவி வருவதால், மல்யுத்தப் போட்டிக்கு முதன்முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்தப் போட்டியைக் காண சா்வதேச அளவில் பலா் வருவது வழக்கம். இம்முறை கரோனா தொற்றையடுத்து, அழைப்பு உள்ளவா்கள் மட்டுமே தசரா விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட உள்ளனா்.

மன்னா் வம்சத்தைச் சோ்ந்த பிரமோதா தேவி, மல்யுத்த வீரா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய பின்னா் போட்டிக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தாா். மல்யுத்தப் போட்டிக்கு தடை விதித்துள்ளது அதிருப்தியை அளிப்பதாக மாநில மல்யுத்த வீரா்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com