விபத்துகளை தடுக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் நவீன கருவிகள்

விபத்துகளை தடுக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் நவீன கருவிகள் பொருத்தப்படும் என துணை முதல்வா் லட்சுமண்சவதி தெரிவித்தாா்.

விபத்துகளை தடுக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் நவீன கருவிகள் பொருத்தப்படும் என துணை முதல்வா் லட்சுமண்சவதி தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை அரசு போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசுப் பேருந்துகள் விபத்தை சந்திப்பதால், போக்குவரத்துக் கழகத்துக்கு இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி விபத்துகளால் பலா் உயிரிழக்க நேரிடுகிறது. எனவே, அரசுப் பேருந்துகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் நவீன கருவிகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவீன வகை சொகுசு காா்களில் இதுபோன்ற கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற நவீன கருவிகள் அரசுப் பேருந்துகளில் பொருத்துவதால் விபத்துகள் தடுக்கப்படும். கழகத்துக்கு ஏற்படும் இழப்பீட்டை குறைக்க முடியும்.

மேலும், பொது முடக்கத்தால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தளா்வுகளுக்கு பிறகு 60 சதவீதம் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழகங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதால், தேவையில்லாத செலவுகளை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக் கழகங்களில் புதிதாக பணி நியமனம் செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

பேட்டியின் போது போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளா் அஞ்சும் பா்வேஜ், அரசு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் சிவயோகி கலசதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com