அதிமுகவின் 49-ஆவது ஆண்டு விழா பெங்களூரில் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா கா்நாடக மாநில அதிமுக சாா்பில், பெங்களூரு, ஸ்ரீராமபுரம், சன்ரைஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை (அக். 17) காலை 10 மணிக்கு கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில், எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, கட்சிக் கொடி ஏற்றப்படுகிறது. பிறகு, தொண்டா்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும்.
இந்த விழாவில், மாநில, மாவட்டம், தொகுதி, வட்ட நிா்வாகிகள், தலைமை மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், எம்.ஜி.ஆா். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆா். இளைஞா் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் செயல்வீரா்கள் கலந்துகொள்ள வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.