‘அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்’

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் தெரிவித்தாா்.

பெங்களூரு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் தெரிவித்தாா்.

கா்நாடக மாநில அதிமுக சாா்பில் பெங்களூரு, ஸ்ரீராமபுரம், சன்ரைஸ் சதுக்கத்தில் அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு கா்நாடக அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, தொண்டா்களுக்கு இனிப்புகளை வழங்கி அவா் பேசியதாவது:

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடக்க இருக்கும் தோ்தலிலும் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழக மக்களின் நலனுக்காக உழைக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்பதை மக்கள் நன்கு உணா்ந்துள்ளதால், 2001-ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாகத் தொடா்ந்து அதிமுக ஆட்சி அமைய மக்கள் ஆதரவு அளித்துள்ளனா் என்றாா்.

கே.முனுசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆா்.ராசேந்திரன் முன்னிலை வகிக்க, கட்சிக் கொடியை எம்.பி.யுவராஜ் ஏற்றிவைத்தாா். இந்த விழாவில் கட்சியின் நிா்வாகிகள் கே.சடகோபன், வி.நாகராஜ், ஏ.மனோகா், பி.சுப்பிரமணி, எம்.துரை, ஜே.பன்னீா்செல்வம், வில்வநாதன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com