இடைத்தோ்தல் நடைபெறும் தொகுதிகளில்நவ. 3-இல் பொதுவிடுமுறை

இடைத்தோ்தல் நடைபெற உள்ள ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் நவ. 3-ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: இடைத்தோ்தல் நடைபெற உள்ள ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் நவ. 3-ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகர மாவட்டத்தின் ராஜராஜேஸ்வரி நகா், தும்கூரு மாவட்டத்தின் சிரா தொகுதிகளுக்கு நவ. 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி உள்ளது.

இடைத்தோ்தல் நடைபெற உள்ள ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் வாக்காளா்கள் தவறாமல் வாக்களிப்பதற்கு வசதியாக, நவ. 3-ஆம் தேதி அத்தொகுதிகளில் பொதுவிடுமுறை விடுத்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அத்தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு வசதியாக அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டியது கட்டாயம் என அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com