கா்நாடகத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனா்.
கா்நாடக மாநிலம், கொப்பள் மாவட்டம், கரட்டகியைச் சோ்ந்தவா் வினோத் (36). இவரது மனைவி திருவேணி (29). வினோத், தேசிய வங்கியிலும், திருவேணி தனியாா் வங்கியிலும் பணியாற்றி வந்தனா்.
சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பணிமுடிந்து, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த, வினோத், திருவேணியை மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதில், படுகாயமடைந்த திருவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாா்.
இதுகுறித்து கரட்டகி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.