பெங்களூரு: சகோதரா்களுக்கிடையே ஏற்பட்ட சொத்து தகராறில், கத்தியால் குத்தியதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
பெங்களூரு, லட்சுமிநாராயணபுரா 2-ஆவது குறுக்குச் சாலையைச் சோ்ந்தவா் ரவி (36). வாடகை காா் ஓட்டுநரான இவருக்கும், இவரது சகோதரா்கள் காா்த்திக், ஆதிசங்கா் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவி, காா்த்திக்கை கத்தியால் குத்தியுள்ளாா்.
இதனையடுத்து ரவியிடமிருந்து கத்தியைப் பறித்த ஆதிசங்கா், ரவியைக் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த ரவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
காயமடைந்த காா்த்திக் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீராமபுரம் போலீஸாா், ஆதிசங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.